ஆப்பிள் நிறுவனம் Ethical Hacker Ryan Pickrenக்கு 58 லட்சம் பணம் கொடுத்து இருக்கிறது எதற்காக என்று இன்று பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த Ethical Hacker Ryan Pickrenக்கு பணம் கொடுத்ததுக்கு முக்கிய காரணம். வாடிக்கையாளரின் பாதுகாப்பை மேம்படுத்த என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டியா ஆமாங்க Safari browserல் கோளாறு இருந்திருக்கு. பயனர்கள் தேவையில்லாத இணையதளத்திற்கு சென்றவுடன் அவர்களின் மொபைல் கேமரா மற்றும் மைக் தானாக வேலை செய்ய ஆர்மபத்திவிடும். அதனால் Hackers எளிதாக ஆப்பிள் பயனர்களின் டேட்டாவை எடுக்க முடியும்.
இதனை கண்டறிந்த Ethical Hacker Ryan Pickren ஆப்பிள் நிறுவனத்தினிடம் கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் உடனே ios 13.1 சரி செய்துள்ளது. இதை பற்றி அந்த Ethical Hacker Ryan Pickren கூறுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் குறைகளை கண்டுபிடிப்பது எனக்கு இன்பமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஏனெனில் இவர் கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிள் மொபைல்களில் ஒரு குறையை கண்டு பிடித்து ஆப்பிள் நிறுவனத்தினிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில் எங்களது சாப்ட்வேரில் சிறிய பழுது இருந்தது அதனை நாங்கள் தற்போது சரி செய்துள்ளோம் என்று கூறியுள்ளது. இதனை கண்டறிந்து உதவி செய்த Ethical Hacker Ryan Pickrenக்கு 58 லட்சம் பரிசாக வழங்கியுள்ளது.
Share your opinion about this post friends